ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் சில சமயங்களில் சில நிகழ்வுகள் முரணாக அமையும். விரைவில் ஆறுச்சாமியாக மீண்டும் தன்னுடைய அவதாரத்தை வெளிப்படுத்த இருக்கும் நாயகன் சிசிடிவி பற்றிய விழிப்புணர்வு விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். அதை சென்னை காவல் துறைதான் முன்னெடுத்துள்ளது. இது பற்றிய தகவல் வந்ததும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது.
சில வாரங்களுக்கு முன்பு அந்த நாயகனின் வாரிசு இரவு நேரத்தில் காரை தாறுமாறாக ஓட்டிச் சென்று ஒரு விபத்தை ஏற்படுத்தினார். மீடியாக்களில் அது பற்றிய செய்தி பரபரப்பாக வெளிவந்தது. அதன் பின் அந்த விவகாரம் அப்படியே அடங்கிப் போனது. ஆனால், சிசிடிவி விழிப்புணர்வு விளம்பரத்தில் நாயகன் நடித்ததையும், அவருடைய மகன் விபத்து ஏற்படுத்தியதையும் இணைத்து விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன்பு நாயகன் அவருடைய மகனுக்கு அனைத்து விதிகளையும் கடைபிடிக்க வேண்டும் என விழிப்புணர்வு கொடுக்கட்டும் என்கிறார்கள்.