டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கன்னட சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவரை இயக்குனர் ராமச்சந்திரன் முள்ளும் மலரும் சீரியலுக்காக தமிழுக்கு அழைத்து வந்தார். இந்த தொடரில் முனிஷ்ராஜா ஹீரோ, தேஜஸ்வினி, தர்ஷா, பாண்டி கமல், வனிதா, ஜானகி, பாலாம்பிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். இதுவரை 166 எபிசோட்கள் ஒளிபரப்பாகி உள்ளது.
இந்த நிலையில் ஹீரோயின்களில் ஒருவரான தேஜஸ்வினி சீரியலில் இருந்து வெளியேறி விட்டார். அவர் தற்போது விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் பொண்ணுக்கு தங்க மனசு தொடரில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
விலகல் குறித்து தேஜஸ்வினி தரப்பில் கூறப்படுவதாவது: சீரியல் தொடங்கும்போது தேஜஸ்வினிதான் ஹீரோயின். சில எபிசோட்களுக்கு பிறகு தர்ஷா உள்ளே கொண்டு வரப்பட்டார். அதன் பிறகு கதையில் தர்ஷாவுக்கு முக்கியத்தும் தரப்பட்டது. ஒரு கட்டத்தில் தர்ஷாவை ஹீரோயினாக மாற்றி, தேஜஸ்வினி கேரக்டரை மெல்ல மெல்ல வில்லியாக மாற்றினார்கள். அது பிடிக்காமல்தான் தேஜஸ்வினி வெளியேறினார் என்கிறார்கள்.