பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
குற்றங்களை தடுக்க போலீசார் பல வழிகளை கையாண்டு வருகின்றனர். அதில் முக்கியமானது வீடு, தெரு, கடைகளில் கண்காணிக்ப்பு கேமரா பொருத்துதல். இதுதொடர்பாக மக்களிடத்தில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே நடிகர் விவேக் கண்காணிப்பு கேமராவின் அவசியம் பற்றிய விழிப்புணர் குறும்படத்தில் நடித்தார்.
இந்நிலையில் அவரைத்தொடர்ந்து நடிகர் விக்ரமும் மூன்றாவது கண் என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார். இதனை இயக்குநர் ஜேடி ஜெர்ரி இயக்கி உள்ளார். இந்த குறும்படத்தை சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய விக்ரம், சிசிடி கேமராவால் குற்றங்கள் நிச்சயம் குறையும். இதை பொருத்துவது காலத்தின் கட்டாயம். சிங்கப்பூரை போன்று சென்னையிலும் பெண்கள் பயமின்றி நடமாடும் காலம் விரைவில் வரும் என்றார்.