ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சைமா என சுருக்கமாக சொல்லப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்று வந்தது. 2017ம் ஆண்டுக்கான சிறந்த கலைஞர்களுக்கான 7வது சைமா திரைப்பட விருது விழா வருகிற செப்டம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் துபாயில் நடைபெற்றது.
அந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளைச் சேர்ந்த திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம், நடிகைகள் குஷ்பு, ராதிகா, கீர்த்தி சுரேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழில் சிறந்த நடிகருக்கான விருது வேலைக்காரன் படத்துக்காக சிவகார்த்திகேயனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு உறுதியாக வருவதாக கூறியிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் துபாய்க்கு வரவில்லை.
சைமா விருது விழாவுக்கு வருவதாக வாக்குக் கொடுத்துவிட்டு சிவகார்த்திகேயன் ஏன் போகவில்லை? சீமராஜா படம் ரிலீஸ் தொடர்பாக நிலவி வந்த பிரச்னை காரணமாக கடும் அப்செட்டாகிவிட்டராம் சிவகார்த்திகேயன். இந்த சூழலில் சைமா விருது விழாவுக்குப்போனால் தன்னால் இயல்பாக இருக்க முடியாது என்பதால் துபாய் பயணத்தை கேன்சல் செய்துவிட்டாராம்.