'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். தமிழில் ஒரு பக்க கதை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படம் இதுவரை வெளிவரவில்லை. அதற்கு பிறகு அவர் நடித்து வெளிவந்த மீன் குழம்பும் மண்பானையும் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் சொந்த மொழியான மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது 5 மலையாளப் படங்களில் நடித்து வரும் அவர் அடுத்து சந்தோஷன் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து சந்தோஷ் சிவன் கூறியிருப்பதாவது: மணிரத்தினத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்து கொடுத்து விட்டேன். அடுத்து மலையாளத்தில் படம் இயக்குகிறேன். இது ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் படம். இந்தியாவின் முன்னணி டெக்னீஷியன்கள் இதில் பணியாற்ற இருக்கிறார்கள். காளிதாஸ், மஞ்சுவாரியார் நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குனர் ஷோபின் ஷாகிர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அக்டோபர் 20ந் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. என்றார்.