இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சர்கார் படத்தை முடித்துவிட்ட நடிகர் விஜய், தன் ரசிகர் மன்ற பொறுப்பாளரான புதுச்சேரி புஸ்ஸி ஆனந்த் மகளின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மனைவி சங்கீதாவுடன் புதுச்சேரி வந்தார். அங்குள்ள, நாவற்குளம் சங்கமித்ரா மகாலில் நேற்று மாலை வரவேற்பு விழா நடந்தது.
விஜய் வருகிறார் என தெரிந்ததும் அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டுவிட்டனர். இதனால் திருமண மண்டபம் ரசிகர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவால் மணமக்கள் அருகில் சென்று கூட வாழ்த்து தெரிவிக்க முடியாத நிலை உருவானது.
பின்னர், ஒருவழியாக விஜய்யும், சங்கீதாவும் மணமக்களை சென்று வாழ்த்தினர். ஆனால் ஓரிரு நிமிடங்களிலேயே மண்டபத்தை விட்டு கிளம்பினர், ஆனால் அவர்களால் காரில் சென்று ஏற முடியவில்லை. அந்தளவுக்கு ரசிகர்கள் திரண்டு விட்டனர். கடும் சிரமத்திற்கு இடையே அவர்கள் காரில் ஏறி சென்றனர்.
இதுஒருபுறம் இருக்க மண்டபத்தில் விஜய்யை பார்க்க முண்டியடித்த ரசிகர்கள், அங்கிருந்த இருக்கைகள் மீது எகிறி குதித்ததால் இருக்கைகள் சேதம் அடைந்தன.