டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கே.பாக்யராஜ் இயக்கிய சித்து பிளஸ்-2 படத்தில் அறிமுகமானவர் சாந்தினி. ஆரம்பத்தில் கவர்ச்சிக்கு தடா போட்டு வந்த அவர், சமீபகாலமாக கதாபாத்திரங்களுக்கேற்ப இறங்கி வந்து நடித்து வருகிறார். அதோடு வெறும் மரத்தைச்சுற்றி டூயட் பாடும் வேடங்களாக இல்லாமல் வித்தியாசமான கேரக்டர்களிலும் நடிக்கிறார்.
இதுபற்றி சாந்தினி கூறுகையில், சினிமாவில் ரொமான்டிக் நாயகியாக வலம் வருவதை விட, பர்பாமென்ஸ் நாயகியாக இடம் பிடிக்க வேண்டும் என்பது தான் எனது நோக்கமாக உள்ளது. அதன் காரணமாகவே மாறுபட்ட வேடங்களாக தேடிப்பிடித்து நடிக்கிறேன். அந்த வகையில், வஞ்சகர் உலகம் படத்திற்கு பிறகு, தற்போது ராஜா ரங்குஸ்கி படத்திலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறேன்.
இந்த வேடம் இதுவரை நான் நடித்ததில் எனக்கு திருப்தி கொடுத்த வேடம். அதனால், இதுவரை டப்பிங் கொடுப்பது பற்றி யோசிக்காமல் இருந்து வந்த நான், இந்த படத்தில் நான், தான் டப்பிங் பேசுவேன் என்று டைரக்டரிடம் கேட்டு முதன் முறையாக எனக்கு நானே டப்பிங் பேசியிருக்கிறேன். அந்த அளவுக்கு இந்த படத்தில் நான் நடித்துள்ள வேடம் என்னை ஈர்த்து விட்டது என்கிறார் சாந்தினி.