ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் சூர்யாவின் 37வது படம், அடுத்தடுத்து இணைந்து வரும் பிரபல நட்சத்திரங்களால் களைகட்டி வருகிறது. இந்தப்படத்தில் சூர்யாவுக்கு இணையான கேரக்டரில் மோகன்லால் நடிக்க, முக்கிய வேடங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பாலிவுட் நடிகர் போமன் இரானி மற்றும் கதாநாயகியாக சாயிஷா ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்போது இந்தப்படத்தில் நடிகர் ரவீந்தரும் இணைந்துள்ளார். எண்பதுகளில் தங்கமகன், ராம் லட்சுமண், பேர் சொல்லும் பிள்ளை என ரஜினி, கமல் படங்களில் வில்லனாக நடித்தவர் தான் இந்த ரவீந்தர்.. அவ்வப்போது மலையாளத்தில் நடித்து வந்த இவர், கடந்த 20 வருடங்களில் தமிழில் 2 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
அதுமட்டுமல்ல 2015ல் மலையாளத்தில் மோகன்லால் நடித்த என்னும் எப்பொழும் படத்திற்கு கதை எழுதிய ரவீந்தர், சுமார் 13 வருடங்களுக்குப்பின் இந்தப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.