தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் சூர்யாவின் 37வது படம், அடுத்தடுத்து இணைந்து வரும் பிரபல நட்சத்திரங்களால் களைகட்டி வருகிறது. இந்தப்படத்தில் சூர்யாவுக்கு இணையான கேரக்டரில் மோகன்லால் நடிக்க, முக்கிய வேடங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பாலிவுட் நடிகர் போமன் இரானி மற்றும் கதாநாயகியாக சாயிஷா ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்போது இந்தப்படத்தில் நடிகர் ரவீந்தரும் இணைந்துள்ளார். எண்பதுகளில் தங்கமகன், ராம் லட்சுமண், பேர் சொல்லும் பிள்ளை என ரஜினி, கமல் படங்களில் வில்லனாக நடித்தவர் தான் இந்த ரவீந்தர்.. அவ்வப்போது மலையாளத்தில் நடித்து வந்த இவர், கடந்த 20 வருடங்களில் தமிழில் 2 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
அதுமட்டுமல்ல 2015ல் மலையாளத்தில் மோகன்லால் நடித்த என்னும் எப்பொழும் படத்திற்கு கதை எழுதிய ரவீந்தர், சுமார் 13 வருடங்களுக்குப்பின் இந்தப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.