ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாளத்தில் குணச்சித்திர நடிகராக அறியப்பட்டாலும் தனது சமூக நோக்கிலான கதைகளால் தான் கதை எழுதும் படங்களின் மீது எதிர்பார்ப்பை தூண்டுபவர் நடிகரும், இயக்குனருமான ஜாய் மேத்யூ. இவரது கதையின் நாயகர்கள் எல்லோருமே நடுத்தர வயதை தாண்டிய மனிதர்கள் தான்.
அந்தவகையில் ஷட்டர் படத்தில், விலைமாது மீது மோகம் கொண்டு திடீரென எல்லைக்கோட்டை தாண்ட முயலும் ஒரு குடும்பத்தலைவன் மனநிலையையும், சிக்கலையும் சொல்லியிருந்தார். மம்முட்டி நடித்த அங்கிள் படத்தில் பெண்கள் விஷயத்தில் ஜெகஜால கில்லாடியான ஒருவருடன் அவரது நண்பரின் டீனேஜ் மகள் ஒருநாள் முழுதும் தனியாக இருக்க நேரிட்டால் எப்படி இருக்கும் என்கிற கான்செப்ட்டை திக்திக் நடையில் சொல்லியிருந்தார்.
அங்கிள் படத்திற்கு விமர்சன ரீதியாகவும், ஓரளவு வசூல் ரீதியாகவும் கிடைத்த வரவேற்பு, இந்தப்படத்தின் கூட்டணியை அடுத்த படத்திலும் தொடர வைத்துள்ளது. ஆம், அங்கிள் பட இயக்குனர் கிரீஸ் தாமோதர் டைரக்சனில் மம்முட்டி மீண்டும் நடிக்கும் படத்திற்கு இதேபோல நடுத்தர வயது மனிதன் ஒருவரின் கதையை எழுதி வருகிறாராம் ஜாய் மேத்யூ.