அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மலையாளத்தில் குணச்சித்திர நடிகராக அறியப்பட்டாலும் தனது சமூக நோக்கிலான கதைகளால் தான் கதை எழுதும் படங்களின் மீது எதிர்பார்ப்பை தூண்டுபவர் நடிகரும், இயக்குனருமான ஜாய் மேத்யூ. இவரது கதையின் நாயகர்கள் எல்லோருமே நடுத்தர வயதை தாண்டிய மனிதர்கள் தான்.
அந்தவகையில் ஷட்டர் படத்தில், விலைமாது மீது மோகம் கொண்டு திடீரென எல்லைக்கோட்டை தாண்ட முயலும் ஒரு குடும்பத்தலைவன் மனநிலையையும், சிக்கலையும் சொல்லியிருந்தார். மம்முட்டி நடித்த அங்கிள் படத்தில் பெண்கள் விஷயத்தில் ஜெகஜால கில்லாடியான ஒருவருடன் அவரது நண்பரின் டீனேஜ் மகள் ஒருநாள் முழுதும் தனியாக இருக்க நேரிட்டால் எப்படி இருக்கும் என்கிற கான்செப்ட்டை திக்திக் நடையில் சொல்லியிருந்தார்.
அங்கிள் படத்திற்கு விமர்சன ரீதியாகவும், ஓரளவு வசூல் ரீதியாகவும் கிடைத்த வரவேற்பு, இந்தப்படத்தின் கூட்டணியை அடுத்த படத்திலும் தொடர வைத்துள்ளது. ஆம், அங்கிள் பட இயக்குனர் கிரீஸ் தாமோதர் டைரக்சனில் மம்முட்டி மீண்டும் நடிக்கும் படத்திற்கு இதேபோல நடுத்தர வயது மனிதன் ஒருவரின் கதையை எழுதி வருகிறாராம் ஜாய் மேத்யூ.