துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
மலையாளத்தில் குணச்சித்திர நடிகராக அறியப்பட்டாலும் தனது சமூக நோக்கிலான கதைகளால் தான் கதை எழுதும் படங்களின் மீது எதிர்பார்ப்பை தூண்டுபவர் நடிகரும், இயக்குனருமான ஜாய் மேத்யூ. இவரது கதையின் நாயகர்கள் எல்லோருமே நடுத்தர வயதை தாண்டிய மனிதர்கள் தான்.
அந்தவகையில் ஷட்டர் படத்தில், விலைமாது மீது மோகம் கொண்டு திடீரென எல்லைக்கோட்டை தாண்ட முயலும் ஒரு குடும்பத்தலைவன் மனநிலையையும், சிக்கலையும் சொல்லியிருந்தார். மம்முட்டி நடித்த அங்கிள் படத்தில் பெண்கள் விஷயத்தில் ஜெகஜால கில்லாடியான ஒருவருடன் அவரது நண்பரின் டீனேஜ் மகள் ஒருநாள் முழுதும் தனியாக இருக்க நேரிட்டால் எப்படி இருக்கும் என்கிற கான்செப்ட்டை திக்திக் நடையில் சொல்லியிருந்தார்.
அங்கிள் படத்திற்கு விமர்சன ரீதியாகவும், ஓரளவு வசூல் ரீதியாகவும் கிடைத்த வரவேற்பு, இந்தப்படத்தின் கூட்டணியை அடுத்த படத்திலும் தொடர வைத்துள்ளது. ஆம், அங்கிள் பட இயக்குனர் கிரீஸ் தாமோதர் டைரக்சனில் மம்முட்டி மீண்டும் நடிக்கும் படத்திற்கு இதேபோல நடுத்தர வயது மனிதன் ஒருவரின் கதையை எழுதி வருகிறாராம் ஜாய் மேத்யூ.