‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழ் ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதித்தவர் மலையாள நடிகர் கலாபவன் மணி. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தநிலையில் கலாபவன் மணியை வைத்து 13 படங்கள் இயக்கியுள்ள இயக்குனர் வினயன், அவரது வாழ்க்கையை 'சாலக்குடிக்காரன் சங்காதி' என்கிற பெயரில் படமாக எடுத்து வருகிறார்..
இந்தப்படத்தில் செந்தில் ராஜாமணி என்பவரை கலாபவன் மணி கேரக்டரில் ஹீரோவாக நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் வினயன். சாலக்குடி பகுதியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றபோது, ஆட்டோ ஓட்டும் ஒரு காட்சியில் அச்சு அசலாக கலாபவன் மணியின் மேனரிசங்களுடன் நடித்தாராம் செந்தில் ராஜாமணி. உடனே அருகில் இருந்த சில ஆட்டோ டிரைவர்கள் ஓடிவந்து அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதார்களாம்.
கலாபவன் மணி சாலக்குடியை சேர்ந்தவர் என்பதும், அவர் சினிமாவுக்குள் நுழையும் முன் சாலக்குடிக்காரன் சங்காதி என்கிற பெயரில் ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது அவரது நண்பராக இருந்தவர்கள் தான் தங்களது நண்பனின் உருவமாக செந்தில் ராஜாமணியை பார்த்ததும் உணர்ச்சி வசப்பட்டு விட்டார்களாம்.