இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதித்தவர் மலையாள நடிகர் கலாபவன் மணி. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தநிலையில் கலாபவன் மணியை வைத்து 13 படங்கள் இயக்கியுள்ள இயக்குனர் வினயன், அவரது வாழ்க்கையை 'சாலக்குடிக்காரன் சங்காதி' என்கிற பெயரில் படமாக எடுத்து வருகிறார்..
இந்தப்படத்தில் செந்தில் ராஜாமணி என்பவரை கலாபவன் மணி கேரக்டரில் ஹீரோவாக நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் வினயன். சாலக்குடி பகுதியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றபோது, ஆட்டோ ஓட்டும் ஒரு காட்சியில் அச்சு அசலாக கலாபவன் மணியின் மேனரிசங்களுடன் நடித்தாராம் செந்தில் ராஜாமணி. உடனே அருகில் இருந்த சில ஆட்டோ டிரைவர்கள் ஓடிவந்து அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதார்களாம்.
கலாபவன் மணி சாலக்குடியை சேர்ந்தவர் என்பதும், அவர் சினிமாவுக்குள் நுழையும் முன் சாலக்குடிக்காரன் சங்காதி என்கிற பெயரில் ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது அவரது நண்பராக இருந்தவர்கள் தான் தங்களது நண்பனின் உருவமாக செந்தில் ராஜாமணியை பார்த்ததும் உணர்ச்சி வசப்பட்டு விட்டார்களாம்.