வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மலையாள திரையுலகில் பிருத்விராஜ் நடித்த, அமர் அக்பர் ஆண்டனி படம் மூலம் இயக்குனராக உருவெடுத்தவர் நாதிர்ஷா. நடிகர் திலீப்பின் நண்பரான இவர், திலீப்புடன் நடிகை கடத்தல் வழக்கு பிரச்சனையிலும் சிக்கியவர். இவர் தனது புதிய படத்தை திலீப்பை வைத்து இயக்குவதாக கடந்த வருடமே அறிவித்திருந்தார்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக நாதிர்ஷாவும், திலீப்பும், சேர்ந்து கேசு ஈ வீட்டிண்டே நாதன் என படத்திற்கு டைட்டில் வைத்து அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால் தற்போது திலீப் இந்தப்படத்தில் நடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இருவரது நட்பில் பிரிவு ஏற்பட்டுவிட்டது என பலரும் பேச துவங்க, அதில் உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ளார் நாதிர்ஷா.
இந்தப்படத்தில் திலீப் 90 வயது கிழவராக நடிக்க வேண்டியுள்ளதாம். சில மாதங்களுக்கு முன் வெளியான கம்மர சம்பவம் படத்திலும் திலீப், இதேபோல 90 வயதான கிழவராக நடித்திருந்தார் என்பதால், இதிலும் அப்படியே நடித்தால் ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள் என்று தான் திலீப் விலகினாராம். ஆனால் இந்தப்படத்தை நாதிர்ஷாவுடன் சேர்ந்து தயாரிப்பதில் இருந்து திலீப் விலகவில்லை. அதுமட்டுமல்ல, இன்னொரு பெரிய பட்ஜெட் படத்தில் இருவரும் இணைய உள்ளார்களாம்.