பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
மலையாள திரையுலகில் பிருத்விராஜ் நடித்த, அமர் அக்பர் ஆண்டனி படம் மூலம் இயக்குனராக உருவெடுத்தவர் நாதிர்ஷா. நடிகர் திலீப்பின் நண்பரான இவர், திலீப்புடன் நடிகை கடத்தல் வழக்கு பிரச்சனையிலும் சிக்கியவர். இவர் தனது புதிய படத்தை திலீப்பை வைத்து இயக்குவதாக கடந்த வருடமே அறிவித்திருந்தார்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக நாதிர்ஷாவும், திலீப்பும், சேர்ந்து கேசு ஈ வீட்டிண்டே நாதன் என படத்திற்கு டைட்டில் வைத்து அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால் தற்போது திலீப் இந்தப்படத்தில் நடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இருவரது நட்பில் பிரிவு ஏற்பட்டுவிட்டது என பலரும் பேச துவங்க, அதில் உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ளார் நாதிர்ஷா.
இந்தப்படத்தில் திலீப் 90 வயது கிழவராக நடிக்க வேண்டியுள்ளதாம். சில மாதங்களுக்கு முன் வெளியான கம்மர சம்பவம் படத்திலும் திலீப், இதேபோல 90 வயதான கிழவராக நடித்திருந்தார் என்பதால், இதிலும் அப்படியே நடித்தால் ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள் என்று தான் திலீப் விலகினாராம். ஆனால் இந்தப்படத்தை நாதிர்ஷாவுடன் சேர்ந்து தயாரிப்பதில் இருந்து திலீப் விலகவில்லை. அதுமட்டுமல்ல, இன்னொரு பெரிய பட்ஜெட் படத்தில் இருவரும் இணைய உள்ளார்களாம்.