ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியத் சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் சந்தோஷ் சிவன். தயாரிப்பாளர்களைக் கிண்டலடித்து இவர் பதிவிட்ட டுவீட் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதில், தயாரிப்பாளர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கும் போது கோபத்தைக் காட்டுவதாகவும், நாயகிகளுக்கு சம்பளம் கொடுக்கும் போது கொஞ்சலைக் காட்டுவதாகவும், ஒரு நாயின் புகைப்படத்தைப் போட்டு பதிவிட்டிருக்கிறார்.
இந்த டுவீட் தயாரிப்பாளர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. பிலிம்ஸ், சதீஷ் குமார், சந்தோஷ் சிவனுக்கே போன் செய்து ஏன் இந்த மாதிரி பதிவிட்டீர்கள் என அவரிடமே கேட்டுவிட்டார். அதற்கு சந்தோஷ் சிவனும் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும் டுவிட்டரில், கலையை நேசிக்க தெரியாத பணவெறி பிடித்த உன் திமிர் பிடித்த விமர்சனத்திற்கு கண்டனம். நீ யாரை சொல்கிறாய், உனக்கு வாய்ப்பு கொடுத்த விஷாலையா இல்லை லிங்குசாமியையா.? மன்னிப்பு கேள், இல்லையென்றால் உன்னை கலைத்தாய் உணரச்செய்யும் என பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, டுவிட்டரில் அந்த பதிவை நீக்கிய சந்தோஷ் சிவன், "நான் பதிவிட்ட டுவீட் ஆங்கிலத்தில் பார்வேர்டாக வந்த செய்தி. பல தயாரிப்பாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நான் நீக்கிவிட்டேன். அந்த பதிவு யாரையும் குறிப்பிடவில்லை என டுவீட் செய்திருக்கிறார்.