இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ், மலையாளம், தெலுங்கு என பல படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சந்தோஷ் சிவன், நேற்று இரவு தயாரிப்பாளர்களை கிண்டலடித்து டுவீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில் தயாரிப்பாளர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் வழங்கும் போது கோபமாக இருப்பதாகவும், ஹீரோயின்களுக்கு சம்பளம் வழங்கும் போது கொஞ்சலாக இருப்பதாகவும் நாய் படம் ஒன்றை வைத்து பதிவிட்டிருந்தார்.
சந்தோஷ் சிவனின் சர்ச்சை டுவீட் பற்றிய கருத்து தயாரிப்பாளர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 கோடி ரூபாய் வரை சம்பளம், தனி கேரவன் என ஹீரோயின்களுக்கு கொடுக்கும் அளவிலான முக்கியத்துவம் அவருக்கும் தரப்பட்டு வரும் நிலையில் அவர் இப்படி பதிவிட்டிருப்பது குறித்து முன்னணி தயாரிப்பாளர்களான சத்யஜோதி தியாகராஜன், தனஞ்செயன், மனோபாலா, தேனப்பன், ஜேஎஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்களாம்.
தயாரிப்பாளர்களுக்குள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பிலும் பல தயாரிப்பாளர்கள் இது குறித்து கொந்தளித்து வருவதாகவும் தெரிகிறது. மேலும் இது பற்றி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாம்.