வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இந்தியத் திரையுலகத்தின் முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் சந்தோஷ் சிவன். சர்ச்சைகளில் சிக்குவது சந்தோஷ் சிவனுக்குப் புதிதல்ல. சமீப காலமாக எந்தவிதமான கருத்துக்களையும் பதிவிடாமல் இருந்தவர், இன்று டுவிட்டரில் தயாரிப்பாளர்களைக் கிண்டலடித்து ஒரு டுவீட் போட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
தயாரிப்பாளர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கும் போது கோபத்தைக் காட்டுவதாகவும், நாயகிகளுக்கு சம்பளம் கொடுக்கும் போது கொஞ்சலைக் காட்டுவதாகவும், ஒரு நாயின் புகைப்படத்தைப் போட்டு பதிவிட்டிருக்கிறார்.
சந்தோஷ் சிவன் தற்போது மணிரத்னம் இயக்கும் செக்கச் சிவந்த வானம் படத்திற்குத் தான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தின் சம்பளத்தைப் பற்றித்தான் அவர் அப்படி குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று அவருடைய பதிவிலேயே பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.