அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
இந்தியத் திரையுலகத்தின் முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் சந்தோஷ் சிவன். சர்ச்சைகளில் சிக்குவது சந்தோஷ் சிவனுக்குப் புதிதல்ல. சமீப காலமாக எந்தவிதமான கருத்துக்களையும் பதிவிடாமல் இருந்தவர், இன்று டுவிட்டரில் தயாரிப்பாளர்களைக் கிண்டலடித்து ஒரு டுவீட் போட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
தயாரிப்பாளர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கும் போது கோபத்தைக் காட்டுவதாகவும், நாயகிகளுக்கு சம்பளம் கொடுக்கும் போது கொஞ்சலைக் காட்டுவதாகவும், ஒரு நாயின் புகைப்படத்தைப் போட்டு பதிவிட்டிருக்கிறார்.
சந்தோஷ் சிவன் தற்போது மணிரத்னம் இயக்கும் செக்கச் சிவந்த வானம் படத்திற்குத் தான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தின் சம்பளத்தைப் பற்றித்தான் அவர் அப்படி குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று அவருடைய பதிவிலேயே பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.