ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அமெரிக்காவில் தனது குழுவினருடன் இசை சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ், அட்லாண்டா, வாஷிங்டன் உள்ளிட்ட பல நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தியவர், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரிலும் செப்., 8-ம் தேதி இசை நிகழ்ச்சி நடத்தினார்.
அங்குள்ள டல்லாஸ் கர்ட்டஸ் கல்வெல் சென்டரில் பிரம்மாண்டமாய் நடந்த இந்த இசை நிகழ்ச்சியில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பாடல்கள் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார் ரஹ்மான். வயது வித்தியாசமின்றி வந்திருந்த அனைவரையும் புல்லரிக்க வைத்தார். சில பாடல்கள் அரங்கத்தையே அமைதியாகியது, பல பாடல்கள் இளைஞர்களை உட்காரவிடாமல் துள்ளிக் குதிக்க வைத்தது.
மனோ, உதித் நாராயண், ஹரிச்சரண், ஜாவித் அலி, ரஞ்சித் பிரோட், நீத்தி மோகன், ஜனிடா காந்தி மற்றும் லிண்டா ஆகியோர் ரஹ்மானின் இசை குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று படைப்பதால் தானோ என்னவோ, இறைவன் ரஹ்மானுக்கு மேலும் மேலும் புகழ் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் என இன்னிசை மழையில் நனைந்த ஒருவர் தெரிவித்தார்.
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்-