தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அமெரிக்காவில் தனது குழுவினருடன் இசை சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ், அட்லாண்டா, வாஷிங்டன் உள்ளிட்ட பல நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தியவர், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரிலும் செப்., 8-ம் தேதி இசை நிகழ்ச்சி நடத்தினார்.
அங்குள்ள டல்லாஸ் கர்ட்டஸ் கல்வெல் சென்டரில் பிரம்மாண்டமாய் நடந்த இந்த இசை நிகழ்ச்சியில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பாடல்கள் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார் ரஹ்மான். வயது வித்தியாசமின்றி வந்திருந்த அனைவரையும் புல்லரிக்க வைத்தார். சில பாடல்கள் அரங்கத்தையே அமைதியாகியது, பல பாடல்கள் இளைஞர்களை உட்காரவிடாமல் துள்ளிக் குதிக்க வைத்தது.
மனோ, உதித் நாராயண், ஹரிச்சரண், ஜாவித் அலி, ரஞ்சித் பிரோட், நீத்தி மோகன், ஜனிடா காந்தி மற்றும் லிண்டா ஆகியோர் ரஹ்மானின் இசை குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று படைப்பதால் தானோ என்னவோ, இறைவன் ரஹ்மானுக்கு மேலும் மேலும் புகழ் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் என இன்னிசை மழையில் நனைந்த ஒருவர் தெரிவித்தார்.
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்-