டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மணிரத்னம் இயக்கி உள்ள படம் செக்க சிவந்த வானம். விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் பாடல் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. படம் வருகிற 27ந் தேதி வெளிவருவதாக உள்ளது.
இந்த நிலையில் படத்திற்கு விலங்குகளால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தில் மணிரத்னம் கோழிகள், புறாக்கள் உள்ளிட்ட 100 பறவைகளை பயன்படுத்தியிருக்கிறார், நாய், ஆடுகள் உள்ளிட்ட விலங்குகளை பயன்படுத்தியிருக்கிறார். படப்பிடிப்பிற்கு விலங்குளை பயன்படுத்த மணிரத்னம் முன் அனுமதி பெறவில்லை. கால்நடை மருத்துவ சான்றிதழும் பெறவில்லை என்று படத்தை வெளியிட தடையில்லா சான்று வழங்க விலங்குகள் நல வாரியம் மறுத்து விட்டது.
இதனால் திட்டமிட்டபடி படம் 27ந் தேதி வெளிவருமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. "படத்தில் நடைமுறையில் மனிதர்களோடு இருக்கும் விலங்குகள் தான் இருக்கிறது. எந்த விலங்கையும் நடிக்க வைக்கவில்லை. காட்சிகளில் அவைகள் யதார்த்தமாக நிற்கும் என்றாலும் விலங்குகள் நல வாரியத்துக்கு படத்தை திரையிட்டு காட்டி விலங்குள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை என்பதை நிரூபித்து படம் திட்டமிட்டபடி வெளிவர ஏற்பாடு செய்யப்படும்" என்று படத் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.