கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
"வருத்தப்படாத வாலிபர் சங்கம்", "ரஜினி முருகன்" படங்களின் வெற்றிக் கூட்டணியான சிவகார்த்திகேயன் - பொன்ராமின் கூட்டணியில், விநாயகர் சதுர்த்தியான இன்று வெளியாகி இருக்கும் மற்றுமொரு படம் தான் சீமராஜா. 24 ஏஎம் சார்பில் ராஜா தயாரித்திருந்தார்.
இப்படத்திற்கு காலை 5 மணிக்கு சிறப்பு காட்சி அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் படம் ரிலீஸாகவில்லை. சினிமா பைனான்சியர்களுக்கு தர வேண்டிய பணப்பட்டுவாடா தான் பிரச்னைக்கு காரணம் என்கிறார்கள். இதனால், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் 5 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது.
பின்னர் பட வெளியீட்டிற்கான பேச்சுவார்த்தை இரு தரப்பிலும் நேற்று இரவு முதல் விடிய விடிய நடந்தது. ஒருவழியாக பிரச்னை முடிவுக்கு வந்ததை அடுத்து பட ரிலீசில் இருந்த சிக்கல் நீங்கியது. 8 மணி முதல் காட்சிகள் திரையிடப்பட்டன.
முன்னதாக 5 மணி காட்சி ரத்தானதால் அதற்கான பணம் ரசிகர்களிடம் மீண்டும் வழங்கப்படும் என தியேட்டர் நிர்வாகத்தினர் கூறினர்.
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு சமமாக சிவகார்த்திகேயனுக்கு தியேட்டர்களில் பெரிய பெரிய கட் - அவுட்கள், பேனர்கள் என ரசிகர்கள் அலங்கரித்தனர். அதிகாலை காட்சி ரத்தானாலும் 8 மணிக்கு பிறகு படம் ரிலீஸானதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.