அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
திருமணம், குழந்தை பிறப்பால் சினிமாவிற்கு சில ஆண்டுகள் ஓய்வு கொடுத்திருந்த நடிகை ஜோதிகா, 36 வயதினிலே படம் மூலம் ரீ-என்ட்ரியானார். கதாநாயகியை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் வரவேற்பை பெறவே, தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார் படங்களில் நடித்தார்.
தற்போது, மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் மற்றும் ராதா மோகனின் காற்றின் மொழி படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாகின்றன. இந்நிலையில் ஜோதிகாவின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தீரன், அருவி போன்ற படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் ஜோதிகா நடிக்கிறார். கார்த்திக் சுப்பராஜிடம் உதவியாளராக இருந்த ராஜ் என்பவர் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு முடிவாகவில்லை. மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. அக்டோபர் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.