'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராஜ மவுலி இயக்கத்தில் ராம் சரண், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்த 'மகதீரா' படம் 2009ம் ஆண்டு வெளிவந்து பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்றது. தமிழிலும் இப்படம் டப்பிங் ஆகி இங்கும் நல்ல வசூலைக் குவித்தது. ஏற்கெனவே இந்தப் படம் ஜப்பான் நாட்டில் சப்டைட்டிலுடன் வெளியானது.
இருப்பினும், 'பாகுபலி 2' படம் ஜப்பானில் வெளியாகி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அதை மனதில் வைத்து 'மகதீரா' படத்தை ஜப்பான் மொழியில் டப்பிங் செய்து சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டார்கள். தங்கள் மொழியில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் 'மகதீரா' படத்தை 'பாகுபலி' படத்தைக் கொண்டாடியது போல கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு 'மகதீரா' நாயகன் ராம் சரண் நன்றி தெரிவித்துள்ளார்.
“நன்றி ஜப்பான், எங்கள் மீது நீங்கள் பொழிந்த அன்புக்கு ஆசீர்வதிக்கப்பட்டதாகவும், தாழ்மையுள்ளதாகவும் உண்மையிலேயே உணருகிறேன். இது எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமாக எப்போதும் இருக்கும். இந்த மறக்க முடியாத படத்திற்காக, ராஜமவுலிக்கு மிகப் பெரிய நன்றி. படம் வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை நம்ப முடியவில்லை,” என்று கூறியிருக்கிறார்.