டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திலீப் நடிப்பில் கடந்த வருடம் வெற்றி பெற்ற ராம்லீலா படத்தை இயக்கியவர் அருண்கோபி. இந்தப்படம் ரிலீஸாவதற்கு முன்பு தான் திலீப், நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி சிறை சென்றார். அவர் சிறையிலிருந்த சமயத்திலேயே இந்தப்படம் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த அருண்கோபி சமீபத்தில் சினிமா பெண்கள் நல அமைப்பை சேர்ந்த நடிகைகளையும், கேரள அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது, "யாரோ ஒரு கிரிமினலின் வாக்குமூலத்தை வைத்துக் கொண்டு ஒருவரை (திலீப்பை) கைது செய்ய அவ்வளவு ஆர்வம் காட்டிய கேரள அரசும், சினிமா பெண்கள் நல அமைப்பும் (WCC) இப்போது அமைதியாக இருப்பது ஏன்? அவளுக்காக நிற்பதற்கு இங்கு யாருக்கும் விருப்பமும் இல்லை" என விளாசியுள்ளார்.
கடந்த வருடம் கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான மலையாள நடிகைக்காக அவளுக்கொப்பம் (அவளுக்காக ) என்கிற பிரச்சாரத்தை அப்போது முன்னெடுத்த ரம்யா நம்பீசன், பார்வதி, ரீமா கல்லிங்கல் போன்ற நடிகைகள் சினிமா பெண்கள் நல அமைப்பையும் உருவாக்கினார்கள்.. அதைத்தான் கடுமையாக விமர்சித்துள்ளார் இயக்குனர் அருண்கோபி.