இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா என இளம் நடிகர் பட்டாளத்தையே களம் இறக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்..
அந்தவகையில் மலையாளத்தில் இருந்து மணிகண்ட ஆச்சாரி என்பவரை இந்தப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்க அழைத்து வந்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியாகி பாராட்டு பெற்ற கம்மட்டிப்பாடம் படத்தில் கவனித்தக்க அறிமுகமாக உள்ளே நுழைந்தவர் தான் இந்த மணிகண்ட ஆச்சாரி.
தற்போது லக்னோவில் நடைபெற்று வரும் பேட்ட படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள மணிகண்ட ஆச்சாரி, வெள்ள பாதிப்பின்போது கேரளாவிற்கு உதவி செய்த விஜய்சேதுபதிக்கு கேரளா மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.