டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கும் 'என்ஜிகே' படம் தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடியாததால் படத்தைத் தீபாவளிக்கு வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால், பட வெளியீடு தீபாவளிக்குப் பிறகு தான் இருக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இருப்பினும் படம் பற்றிய ஏதாவது 'அப்டேட்' தருமாறு அடிக்கடி ரசிகர்கள் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.
குறிப்பாக படத்தின் இயக்குனர் செல்வராகவன் டுவிட்டரில் எந்த ஒரு பதிவைப் போட்டாலும் அதில் 'என்ஜிகே' பற்றி அப்டேட் சொல்லுங்கள் என ரசிகர்கள் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே வருகிறார்கள். இதற்குப் பதிலளிக்கும் விதமாக செல்வராகவன் ஒரு தாழ்மையான வேண்டுகோள் ஒன்றை இன்று வைத்திருக்கிறார்.
அதில், “ரசிகர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள். உங்கள் மீது மிகப் பெரிய மரியாதை இருக்கிறது. ஒரு அப்டேட்டிற்காக நாங்கள் பல நாட்கள் அல்லது வாரங்கள் மிக கவனத்துடன் எனர்ஜியாக வேலை செய்ய வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு அப்டேட்டைக் கொடுப்பதை நான் நம்பவில்லை. நாங்கள் மிகவும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம், அதற்கான நேரம் விரைவில் வரும்,” என்று தெரிவித்துள்ளார்.