ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முன்பெல்லாம் திரைப்படங்கள் நூறு நாட்களுக்கு மேலாக ஓடும். சமீபகாலமாக ஒரு வாரம் இரண்டு வாரம் ஓடுவதென்பதே அரிதாகி விட்டது. திருட்டு விசிடிக்கள் மற்றும் இணைய தளங்களில் புதிய படங்கள் உடனடியாக வெளியாகி விடுவதால், ஓரிரு வாரங்களில் படங்களை திரையிட்டு, போட்ட பணத்தை எடுத்தாக வேண்டிய கட்டாய சூழலும் தயாரிப்பாளர்களுக்கு உருவாகியிருக்கிறது.
இதன்காரணமாக, சினிமாத் தொழில் நலிவடைந்து வருவதாகவும், சினிமா படிப்படியாக அழிந்து விடும் என்றும் சிலர் விரக்தியில் பேசுகிறார்கள். ஆனால் இதுபற்றி தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கூறுகையில், சினிமாவை யாராலும் அழிக்க முடியாது. ஆங்காங்கே தியேட்டர்களை இடித்து விட்டு மால் கட்டுவதாக சொல்கிறார்கள்.
ஆனால், ஒரு தியேட்டரை இடித்தால் அதே இடத்தில் நான்கு தியேட்டர்கள் வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் பார்க்கையில் இந்த ஆண்டில் மட்டும் புதிதாக 160 புதிய ஸ்கிரீன் உருவாகியிருக்கிறது. ஆக, சினிமா இப்போது தான் நன்றாக உள்ளது. நாளுக்கு நாள் இது வளருமே தவிர, யாராலும் அழிக்க முடியாது என்கிறார் தேனப்பன்.