'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
சமீபத்தில் கேரளாவில் கொல்லம் கருநாகப்பள்ளியில் ஒரு நகைக்கடையின் புதிய கிளையை திறந்து வைக்க வருகை தந்தார் நடிகர் துல்கர் சல்மான்.. சமீபத்தில் தான் வெள்ள பாதிப்பிலிருந்து கேரள மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையிலும் துல்கரை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூடியது ஆச்சர்யப்பட வைத்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய துல்கர் சல்மான், "ஏற்கனவே சில முறை இந்த விழாவை நடத்த திட்டமிட்டு, மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக தள்ளி வைத்திருந்தார்கள். தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக எனக்கு கிடைத்திருக்கும் பரிசுத்தொகையை அப்படியே கேரள முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்" என கூறினார்.