ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மெர்சல் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படமும் அரசியல் கதையில் உருவாகி வருகிறது. வெளிநாட்டில் இருந்து தாய்நாடு திரும்பும் விஜய், இங்கு விவசாயிகள், மீனவர்களுக்கு நடக்கும் கொடுமைகளைக் கண்டு பொங்கி எழுந்து அடுத்தபடியாக அரசியல் கோதாவில் குதிப்பது போன்று இந்த படத்தின் கதை உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த சர்கார் படத்தில் ராதாரவி அரசியல்வாதியாக நடித்துள்ளார். அவர்தான் ஆரம்பத்தில் இருந்தே சர்கார் அரசியல் படம் என்பதை சில பேட்டிகளில் சொல்லி வந்தார். அந்த வகையில், தற்போது இன்னொரு தகவலையும் வெளியிட்டுள்ளார் ராதாரவி. அது என்னவென்றால், விஜய்க்கு அரசியல் ஆர்வம் அதிகம். அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார். அரசியலில் என்ட்ரி கொடுக்க கவனமாக திட்டமிட்டு வரும் அவர், அரசியலின் அனைத்து நுணுக்கங்களையும் கற்று வருகிறார். அரசியலுக்கு வர பொறுமை முக்கியம். அதைதான் தற்போது விஜய் செய்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இப்படி விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து பலரும் கருத்துக்கள் சொன்னபோதும், இதுவரை விஜய் அதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. தொடர்ந்து மெளனம் காத்து வருகிறார்.