மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தனது அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும், நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்கள், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு 360 விவசாயிகளின் குடும்பங்களுக்கு 3 கோடியே லட்சம் ரூபாயும், 44 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு 2 கோடியே 20 லட்சம் ரூபாயும் வழங்கினார். ராணுவ வீரர்கள், விவசாயிகளின் குடும்பத்தை தனது வீட்டுக்கே வரவழைத்து இந்த நிதியை அவர் மனைவி ஜெயா பச்சன் மூலம் வழங்கினார். இதுகுறித்து அமிதாப்பச்சன் கூறியிருப்பதாவது:
ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை நாட்டுக்காக தியாகம் செய்திருக்கிறார்கள். மனைவிகளை, பெற்றோரை, குழந்தைகளை இன்னும் சிலர் பிறக்கப்போகும் குழந்தைகளையும் பிரிந்து சென்றிருக்கிறார்கள். நம்மையும் நமது நாட்டையும் பாதுகாக்க அவர்கள் போராடியுள்ளனர். அவர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.
இந்த குடும்பத்தினரின் வலிகளையும் வேதனைகளையும் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இவர்களுக்கு உதவ இன்னும் பலர் முன் வரவேண்டும். இன்னும் பலர் உதவ வேண்டும் என்பதற்காக இதை நான் வெளிப்படையாக செய்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.