விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
நாகர்கோவில் கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது மனைவி லதா. இவர்களது 12 வயது மகன் அவினாஷ். 7 ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சாலை விபத்தில் அவினாஷ் படுகாயம் அடைந்து மூளை சாவு அடைந்தான். அவனை காப்பாற்ற முடியாது என டாக்டர்கள் கூறினர். இதையடுத்து அவனது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அவனது உறுப்புகளை தானம் செய்ய அவனது பெற்றோர் தானாகவே முன் வந்தனர்.
விபத்தில் பலியான மாணவன் அவினாஷ் தீவிர ரஜினி ரசிகன். பென்சில் ஆர்ட் மூலம் ரஜினியின் படத்தை அவன் வரைந்து இருந்தான். இந்த படத்தை எப்படியாவது ரஜினியிடம் காண்பித்து கையெழுத்து பெற வேண்டும் என்று தனது தந்தையிடமும், தாயாரிடமும் அடிக்கடி கூறி வந்தான். ஆனால் அவனது ஆசை நிறைவேறாமல் போனது. இந்த நிலையில் மகனின் ஆசைப்படி, அந்த படத்தை ரஜினியிடம் காண்பித்து, எப்படியாவது கையெழுத்து வாங்க வேண்டும் என்ற முயற்சியில் சுவாமிநாதன் ஈடுபட்டார்.
இதற்காக அவர், ரஜினி மன்ற மாநில அமைப்பு செயலாளர் இளவரசன் மூலம் ரஜினிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தை பார்த்த ரஜினி, உடனடியாக அவினாசின் பெற்றோரை சென்னைக்கு அழைத்து வரும்படி தனது மன்ற பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன், அவினாசின் தந்தை சுவாமிநாதன், அவரது தாய் லதா ஆகியோர் தனது மகன் வரைந்த ஓவியத்துடன் சென்னை சென்று ரஜினியை சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு ஆறுதல் கூறிய, ரஜினி "உங்கள் மகன் மறையவில்லை. இன்னும் அவன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். உங்களின் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ததன் மூலம் பலருக்கு நீங்கள் வாழ்வளித்து உள்ளீர்கள்" என்று கூறி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவினாஷ் வரைந்த படத்தை வாங்கி அதில் கையொப்பமிட்டார்.