ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் பிக்பாஸ் 2ம் பாகம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அரியலூர் மாவட்டம் மாத்தூரை சேர்ந்த குணசேகரன்(30), என்பவர் தங்கி ஏசி மெக்கானிகாக வேலை செய்து வந்துள்ளார். நேற்று இரவு இவர் தான் தங்கியுள்ள அறையின் இரண்டாவது மாடிக்கு சென்று சாப்பிட்டு விட்டு கை கழுவ சென்றபோது 2 வது மாடியில் இருந்து தவறி கிழே விழுந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் குனசேகரனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குணசேகரன் உயிர் இழப்பு குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.