ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
விவசாயிகளை சந்திக்க சென்ற ஸ்வராஜ் அபியான் அமைப்பை சேர்ந்த யோகேந்திர யாதவை, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி வேறு இடத்திற்கு அழைத்து சென்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது : தமிழக விவசாயிகளிடம் கருத்து கேட்க சென்ற நண்பர் யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். இது விமர்சனம் மற்றும் கண்டனத்திற்கு உரியது. கருத்து கேட்டதை கூட தடுக்கும் இந்த அதிகாரம் எப்படி இவர்களுக்கு வந்தது. சட்டத்தை காரணமாக சொல்லி, குரல்களே எழாமல் செய்யும் வேலை சர்வாதிகாரம் என்றே தோன்றுகிறது.
இது ஜனநாயக நாடு தான் என்பதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. இன்னொன்றையும் ஞாபகப்படுத்த கடமைப்பட்டிருக்கிறேன். ஜனநாயகத்தின் வழியாக தான் சர்வாதிகாரிகள் உலகெங்கும் ஆட்சியை பிடித்துள்ளனர். மக்கள் கருத்துக்களை தெளிவாக பயமின்றி எடுத்துச் சொல்லும் சூழல் வர வேண்டும். அப்படி வராவிட்டால், வர வைக்க வேண்டும். நண்பர், சகோதரர் யோகேந்திர யாதவ்வின் கைது கண்டனத்திற்கு உரியது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகளிடம் கருத்துக்கேட்கச் சென்ற நண்பர் திரு @_YogendraYadav கைது செய்யப்பட்டது விமர்சனத்துக்குரியது, கடும் கண்டனத்துக்குரியது. pic.twitter.com/JmwJz7HIQo
— Kamal Haasan (@ikamalhaasan) September 8, 2018