இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரஜினி தற்போது நடித்து வரும் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த 3 மாதங்களாக நடந்து வருகிறது. த்ரிஷா, விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபிசிம்ஹா உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார்.
இந்த படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. படம் தொடங்கி 3 மாதங்களுக்கு பிறகு டைட்டில், பர்ஸ்ட் லுக் வெளியிடும் வரை காத்திருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாது :
ரஜினியை பார்த்து தான் சினிமாவுக்கு வந்தேன். அவரை இயக்க வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. ஜிகர்தண்டா படத்தில் அசால்ட் கேரக்டர் ரஜினியை மனதில் வைத்து தான் உருவாக்கினேன். அப்போது நான் அறிமுக இயக்குனர் என்பதால் அவரை அணுக முடியவில்லை. இப்போது அவரை இயக்குகிறேன். எனது வாழ்நாள் கனவு நிறைவேறி இருக்கிறது.
நான் எப்போதுமே படத்தின் தலைப்போடு தான் படத்தை தொடங்குவேன். ஆனால் சூப்பர் ஸ்டார் படம் என்பதால் வலுவான ஒரு டைட்டிலுக்காக நேரம் எடுத்துக் கொண்டேன். இதற்காக 3 மாதங்கள் பொறுமையோடு காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பேட்ட ரஜினியின் 165வது படம். அதனால் அதன் முக்கியத்துவம் கருதி உருவாக்கி வருகிறேன். அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கிற படமாக இருக்கும். படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. விரைவில் திரைக்கும் வந்துவிடும். என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.