ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இப்போதெல்லாம் சமூக நலன் சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறை காட்டி வருகிறார் கரீனா கபூர். குறிப்பாக, பெண்கள் உரிமை, பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகியவற்றை எதிர்த்து, ஆவேசமாக குரல் கொடுக்க துவங்கியுள்ளார்.
சமீபத்தில், மும்பையில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற அவர், 'பெண்கள், தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ வேண்டும். யாருக்காகவும், எதற்காகவும், தங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்க கூடாது. முக்கியமாக, பெண்கள், எதற்கும் பயப்படக் கூடாது' என, பேசினார்.'நானும், முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் பயப்படும் பெண் தான். ஆனால், திருமணத்துக்கு பின், ரொம்பவே மாறி விட்டேன்.
என்னை, மிகப்பெரிய பிரபலமாகவோ, ஒரு தேவதையாகவோ, எப்போதுமே நினைத்தது இல்லை. சாதாரண பெண்ணாகவே நினைக்கிறேன். சாதாரண பெண்ணாகவே வாழ்கிறேன்' என்றும், அவர் பேசினார்.
'கரீனா கபூருக்கு, 37 வயதாகி விட்டது. அதனால், படிப்படியாக சினிமாவில் இருந்து விலகி, சமூக நலன் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்ட முடிவு செய்துள்ளார். இதன் வெளிப்பாடு தான், கரீனாவின் சமீபத்திய செயல்பாடுகள்' என்கின்றன, பாலிவுட் வட்டாரங்கள்.