இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி, தற்போது புரோ கபடி என்ற பெயரில் நவீன முறையில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான புரோ கபடி போட்டிகள், அடுத்த மாதம் 5-ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதில் விளையாடும் தமிழ் தலைவாஸ் அணியின் தூதராக நடிகர் விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று நடந்த அணியின் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு விஜய் சேதுபதி பேசியதாவது:
கபடி நம் தமிழர்களின் வீர விளையாட்டு. அது நம் பாரம்பரியத்தோடு கலந்த விளையாட்டு. புரோ கபடியின் மூலம் கபடி விளையாட்டை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமை அடைகிறேன். நம் விளையாட்டான கபடியை நாம் தான் மேம்படுத்த வேண்டும். நானும் விளையாட்டு மைதானத்துக்கு வந்து தமிழ்நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துவேன். கிரிக்கெட்டையும் தாண்டி கபடியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஜெயிக்க வேண்டும். என்றார்.