தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள நடிகர் மோகன்லால் விரைவில் அரசியலில் குதிக்க இருக்கிறார் என்பதுது தான் கேரளாவில் இப்போதைய பரபரப்பு. கடந்த சில தினங்களுக்கு முன்பு டில்லி சென்ற மோகன்லால், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இதற்கு முன்பு பல தருணங்களில் மோகன்லால் பிரதமர் நரேந்திர மோடியையும், அவரின் செயல்பாட்டையும் பாராட்டி வந்துள்ளார். அதனால் அவர் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் இணையப் போகிறார் என்ற செய்தி பரவியது.
"பாரதிய ஜனதா கட்சி வலுவாக காலூன்ற முடியாத மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. அதனால் அங்குள்ள திரைப்பட நட்சத்திரங்களை பயன்படுத்தி கட்சியை பலப்படுத்த நினைக்கிறது. தமிழ்நாட்டில் ரஜினி, கேரளாவில் மோகன்லால் என்பது தான் பா.ஜ.கவின் டார்கெட்" என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இதற்கிடையில் வருகிற பாரார்லிமென்ட் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் மோகன்லால் போட்டியிடப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனை மோகன்லால் வலுவாக மறுக்கவில்லை.
இதுபற்றி அவர் கூறும்போது ''பா.ஜனதா சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனது அறக்கட்டளை நடத்தும் விழாவுக்கு அழைப்பு விடுக்கவே பிரதமரை சந்திதேன். எனது வேலையை செய்ய விடுங்கள்'' என்றார்.