மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
முன்னணி நடிகராக விளங்கும் தனுஷ், 'பவர் பாண்டி' படத்தின் மூலம் இயக்குநர் ஆனார். பவர் பாண்டி சிறந்த படமாக பேசப்பட்டது. அடுத்தப்படத்தை இயக்குவது பற்றி முடிவெடுக்காமலே இருந்தார் தனுஷ். வரலாற்று படமொன்றை அவர் இயக்கப் போவதாக கூறப்பட்டது.
பைனான்ஸ் பிரச்னையில் இந்தப்படம் உருவாவதில் சிக்கல் நிலவியது. சில நாட்களாக தனுஷ், நெல்லை பகுதியில் முகாமிட்டு லொகேஷன் பார்த்தார். இந்நிலையில், தனுஷ் இயக்கும் இரண்டாவது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாகார்ஜூனா, எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த், அதிதி ராவ் நடிக்கின்றனர். இசை சான் ரோல்டன். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. படத்தின் பூஜை மட்டும் போடப்பட்டுள்ளது.