இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்திப்படத்தில் நடித்தபோது ப்ரியங்கா சோப்ராவுடன் மோதல் ஏற்பட்டதாக வெளியான செய்தியை நடிகை இலியானா மறுத்துள்ளார். தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக திகழ்பவர் இலியானா. தமிழில் விஜய் ஜோடியாக் நண்பன் படத்தில் நடித்துள்ளார். தற்போது பார்ஃபி எனும் இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முதல் நாயகியாக ப்ரியங்கா சோப்ரா நடிக்கிறார். இருவருக்கும் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின. இருவரும் தனக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இயக்குனரை வற்புறுத்தியதாகவும், ஒரு கட்டத்தில் இருவரும் நேரடியாக ஒருவரையொருவர் திட்டி தகராறில் ஈடுபட்டதாகவும், பின்னர் படப்பிடிப்பு குழுவினர் சமரசப்படுத்தியதாகவும் கூறப்பட்டது.
இதனை இலியானா மறுத்துள்ளார். அவர் அளித்தள்ள பேட்டியில், ப்ரியங்கா சோப்ராவும் நானும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறோம். ப்ரியங்கா சோப்ராவை எனது தோழி என்று சொல்ல மாட்டேன். ஒரு நடிகை என்ற ரீதியிலேயே எங்களுக்குள் அறிமுகம் உள்ளது. வேறு எந்த தொடர்பும் இல்லை. எங்களுக்குள் மோதல் நடந்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ப்ரியங்கா சிறந்த நடிகை, என்று கூறியுள்ளார்.