தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சங்கராபரணம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை துளசி, அதன்பின்னர் ஏராளமான படங்களில் நடித்தார். தமிழில் சிலகாலம் நடிக்காமல் இருந்த துளசிக்கு, பண்ணையாரும் பத்மினியும் படம் நல்ல அடையாளத்தை தந்தது. தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், விஜய்யுடன் சர்கார் படத்தில், அவரின் அம்மாவாக நடித்திருக்கிறார்.
இப்படம் அனுபவம் குறித்து மனம் திறந்த துளசி, "சினிமாவிற்கு வந்த இத்தனை ஆண்டுகளில் இப்போது தான் விஜய் உடன் நடிக்கிறேன். அவருடன் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. படப்பிடிப்பில் என்னை அம்மா என்று தான் அழைப்பார். அவர் பழகிய விதம், அவர் செய்த ஒவ்வொரு செயலும் என்னை நெகிழ செய்தது. தனது சொந்த அம்மா போன்றே என்னையும் பாவித்தார்.
என் பையன் உடன் நான் எப்படி இருப்பேனோ அதுபோன்ற உணர்வையே விஜய் தந்தார். என் மகன் சாய்யை பற்றி நிறைய விஷயங்களை கேட்டறிந்தார். சினிமாவை பற்றி நன்றாக கற்று கொள்ள சொல்லுங்கள் யாரிடமாவது ஒருவருடம் உதவி இயக்குநராக பணியாற்ற சொல்லுங்கள் என அவர் மீது அதிக அக்கறை எடுத்து கொண்டார். படப்பிடிப்பில் என்னை அம்மா என்றே அழைத்தார். சர்கார் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்றார்.