ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராகி விட்டவர் சிவகார்த்திகேயன். இவருடன் பல படங்களில் காமெடியனாக நடித்தவர் சூரி. இவர், சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருக்கிறார். அப்போது அந்த கோயிலில் உள்ள பூசாரி, சூரியை அடையாளம் கண்டு கொண்டவர் நலம் விசாரித்திருக்கிறார்.
அதையடுத்து, சிவகார்த்திகேயன் எப்படி இருக்கிறார் என்று கேட்டவர், அவருக்கு விபூதி பொருட்கள் அடங்கிய ஒரு பிரசாத பார்சலை கொடுத்து, இதை சிவகார்த்திகேயனிடம் கொடுத்து விடுங்கள் என்று சொன்னாராம்.
இந்த தகவலை சீமராஜா படத்தின் டிரைலர் விழாவில் சொன்ன சூரி, என்னை நேரில் பார்த்ததால் என்னிடம் அந்த பூசாரி நலம் விசாரித்தார். ஆனால் அங்கு வராத சிவகார்த்திகேயனை நலம் விசாரித்ததோடு பிரசாதமும் கொடுத்து விடுகிறார். அந்த அளவுக்கு சினிமா மூலம் மனிதர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த பிரார்த்தம் எல்லோருக்கும் கிடைத்து விடாது என்று உருக்கமாக பேசினார்.