ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பஞ்சாபி நடிகை சோனம் பாஜ்வா. 4 ஆண்டுகளுக்கு முன்பு கப்பல் என்ற தமிழ் படத்தில் நடித்தார். இப்போது மீண்டும் காட்டேரி என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார். 4 வருட இடைவெளிக்கான காரணம் குறித்து சோனம் பாஜ்வா கூறியதாவது :
கப்பல் படம் நடித்து முடித்த உடனேயே இரண்டு மூன்று படங்கள் வாய்ப்பு வந்தது. அப்போது நான் பஞ்சாபி படங்களில் பிசியாக இருந்தால் நடிக்க முடியவில்லை. அவர்களும் எனக்காக காத்திருக்க விரும்பவில்லை. அதன் பிறகு ஒன்றிரண்டு பேர் போனிலேயே எனக்கு கதை சொன்னார்கள். அந்த கதைகள் எனக்குப் பிடிக்கவில்லை. சென்னையில் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. அதனால் தொடர்பு விட்டுபோய்விட்டது.
காட்டேரி படத்தில் நான் தான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் டீகே பேசினார். ஆரம்பத்தில் பேய் படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டேன். என்றாலும் கதையை கேட்டுவிட்டு உங்கள் முடிவை சொல்லுங்கள் என்று சொன்னார். கதை கேட்டேன் பிடித்திருந்தது உடனே ஒப்புக் கொண்டேன். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கும் ஆர்வம் இருக்கிறது. அதற்காக யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்க மாட்டேன். நல்ல கதைகள் தேடி வந்தால் நடிப்பேன். என்றார் சோனம் பாஜ்வா