தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் நடிகர்களில் தமிழ் உணர்வு மிக்கவர் ஜி.வி.பிரகாஷ்குமார். ஜல்லிக்கட்டு போராட்டம், அனிதா தற்கொலை, ஸ்டெர்லைட் போராட்டம், விவசாயிகள் போராட்டம், நீட் எதிர்ப்பு என பல்வேறு பிரச்னைகளின்போது மற்ற ஹீரோக்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தபோது, எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் கவலைப்படாமல் துணிவுடன் களத்தில் இறங்கிக் குரல் கொடுத்தவர் ஜி.வி.பிரகாஷ்குமார்.
ஒக்கி புயலின்போது காணாமல் போன மீனவக் குடும்பங்களுக்கும், தமிழகத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள விவசாயிகளின் குடும்பங்களுக்கும் ஏராளமான உதவிகளைச் செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அதுமட்டுமின்றி ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகள் உட்பட பல்வேறு சமூகப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.
இந்நிலையில் மற்ற ஹீரோக்களுக்கு முன்மாதிரியான ஒரு விஷயத்தை செய்து அசர வைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அதாவது, உலகம் வென்ற தமிழ், நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ், எனை ஆட்கொண்ட தமிழ்... இனி புதிய விதி செய்யும் என் “கையெழுத்துகள்” தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்கிறேன் ... #தமிழ்விதியெனசெய் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார். அதோடு தன்னுடைய தமிழ் கையெழுத்தையும் வெளியிட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷின் இந்த அறிவுப்புக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.