சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் |
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், லால் நடிக்கும் 'சீமராஜா' செப்டம்பர் 13-ஆம் தேதி வெளியாகிறது. 'சீமராஜா'வை தொடர்ந்து இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். எம்.ராஜேஷ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது!
இதற்கிடையில் சீமராஜா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. படு ஆடம்பரமாக நடைபெற்ற அந்தவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது,“சினிமாவை பொறுத்தவரையில் நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. அதே நேரம் நான் யாரைப் பார்த்தும் பயப்படுவதும் இல்லை, பொறாமைப்படுவதும் இல்லை! சினிமாவில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்'' என்று பேசினார்!
அவரது பேச்சு மட்டுமல்ல அந்த விழாவில் அவருக்குக் கொடுக்கப்பட்ட பில்ட்அப்பும், சீமராஜா டிரைலரில் சிவகார்த்திகேயனை ரஜினியைப் போல் காட்டினர். இது சக நடிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல ஹீரோக்கள் தங்கள் மனக்குமுறலை வெளிக்காட்டிக் கொள்ளாத நிலையில் அருண் விஜய் பொங்கிவிட்டார்.
“யார் எல்லாம் மாஸ் காட்டுறதுன்னு விவஸ்தை இல்லாமப் போச்சு... யார் உண்மையான திறமைசாலின்னு தமிழ் ஆடியன்ஸுக்கு தெரியும்...” என்று அதிகாலை 2.10க்கு டுவீட் பண்ணி சிவகார்த்திகேயன் மீதான தன்னுடைய எரிச்சலை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.
பின்னர் இது நான் பதிவிட்டி டுவீட்ட அல்ல, தனக்கு தெரியாமல் ஹேக்கர்கள் டுவீட் பண்ணியதாக டுவிட்டரில் மறுப்பு சொல்லியிருக்கிறார் அருண் விஜய்.