600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
கடவுளின் தேசம் என வர்ணிக்கப்பட்ட கேரளா, சமீபத்தில் பெய்த மழையால் நிலைக்குலைந்து போய் உள்ளது. நிலச்சரிவில் சிக்கி 350-க்கும் மேற்பட்டோர் பலியாகினர், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். அங்கு இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி கொண்டிருக்கிறது.
பிரபல பாடகியான உஷா உதூப், கேரள வெள்ளத்தின் துயரத்தை உருக்கமான பாட்டாக பாடி வீடியோவாக வெளியிட்டுள்ளார். "என்டே கேரளா எத்ரே சங்கடம்..." என்ற அந்தப்பாடல் இணையதளங்களில் பிரபலமாகி உள்ளன.
இதுகுறித்து உஷா உதூப் கூறுகையில், கொச்சியில் ஏற்பட்ட பாதிப்புகள் என்னை மிகவும் பாதித்தது. கேரளாவிற்கு என்ன செய்யலாம் என மகளிடம் கேட்டேன். அவள் தான், சித்தூர் கோபியிடம் நான் பாடிய 'என்டே கேரளா' பாடலை தற்போதைய கேரளா பாதிப்புகளை விவரிக்கும் வகையில் எழுதித்தரும்படி கேட்குமாறு கூறினாள். இப்படித்தான் அந்தப்பாடல் உருவானது. கேரள மக்களுக்கு இந்தப்பாடலை சமர்ப்பிக்கிறேன் என உஷா உதூப் கூறியுள்ளார்.