தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாமல் எத்தனையோ நடிகர்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் விக்னேஷ். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். ஆனாலும் அவரால் நிலைத்த ஒரு இடத்தை பெற முடியவில்லை. 1992ல் தொடங்கி இன்று வரை தொடர்கிறது அவரது போராட்டம்.
பாலா இயக்கிய சேது படத்தில் விக்னேஷ் நடித்திருக்க வேண்டியது. ஆனால் அந்த நேரத்தில் விக்னேஷ் நடிக்க முடியாமல் போக, விக்ரம் நடித்தார். ஒருவேளை விக்னேஷ் நடித்திருந்தால் இன்று விக்ரம் இருக்கும் இடத்தில் விக்னேஷ் இருந்திருக்கலாம். சமீபத்தில் வெளியான ஆருத்ரா படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் விக்னேஷ். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவருக்கு ஒரு கவனம் கிடைத்திருக்கிறது. இதுபற்றி அவர் கூறியதாவது:
எனக்கு சினிமா மோகம் அதிகம். 24 மணி நேரத்தில் தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்கள் எல்லாமே சினிமா தான். பெரிய இயக்குனர்கள் படங்களில் நடித்தும் எனக்கென்று ஒரு பிரேக் வரவில்லை என்கிற ஏக்கம் உண்டு. அதற்காக சோர்ந்து போய் விட வில்லை. சொந்தமாக தொழில் செய்து அதில் முன்னேறி இருக்கிறேன்.
பா.விஜய்யும் நானும் நண்பர்கள். ஒரு நாள் ஒரு கதையை சொல்லி என்னை நடிக்க கேட்டார். கதையை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இவ்வளவு கொடூர வில்லனா என்று தயங்கினேன். ஏன் விக்னேஷ் தயக்கம். இந்த படத்து மூலமா மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படனும்னு நினைத்து தான் இந்த படத்தை எடுக்கிறோம். நீங்க நடிங்க கெட்டவனா நடிச்சாலும் நல்ல பேர் கிடைக்கும்னு சொன்னார். நடிச்சேன் படத்தோட டப்பிங் முடிச்சிட்டு யோசிச்சேன். இவ்வளவு கொடூரமான வில்லனாகவா நடிச்சோம் என்று. படத்தில் செய்த தவறுக்கு பிராயசித்தம் செய்கிற மாதிரி காட்சியை எடுத்த இயக்குனர் அதை கட் செய்தது எனக்கு வருத்தம் தான்.
சேது படத்தை தவற விட்டதை நினைத்து தினமும் வருத்தப்படுவேன். பாலாவும் நானும் ரூம் மேட்ஸ். பல பிரச்சனைகளை சந்தித்ததால் நான் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனாலும் என் நண்பன் இன்று ஜெயித்து தலை நிமிர்ந்து இருக்கிறது பெருமையாக இருக்கு. சேது மாதிரி பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படமும் ஏழு நாட்கள் நடித்த பிறகு மாற்றப்பட்டேன். அந்த வலியெல்லாம் இன்னும் போகவில்லை. சேதுவில் இழந்ததை பெற போராடிட்டே இருப்பேன். நிச்சயம் ஜெயிப்பேன், என்றார் விக்னேஷ்