ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கேரளாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கால் அந்த மாநிலம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. பல தரப்பிலிருந்தும் கேரள அரசுக்கு நிதி வழங்கி வருகிறார்கள். தமிழ் நடிகர்களே கோடி கணக்கில் நிதி கொடுக்கும்போது மலையாள நடிகர்கள் சில லட்சங்களே கொடுத்துள்ளனர் என்ற விமர்சனம் கேரளாவில் பரவலாக எழுந்துள்ளது. இதுகுறித்து வெளிப்படையாக பேசி உள்ளார் பழம்பெரும் மலையாள நடிகை ஷீலா. அவர் கூறியிருப்பதாவது:
கேரளாவில் வெள்ளத்தால் மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து நிற்கிறார்கள். ஆனால் மலையாள நடிகர்கள் வெள்ள நிவாரணத்துக்கு குறைவான தொகையை வழங்கி உள்ளனர். முன்னணி மலையாள நடிகர்கள் பயன்படுத்தும் கார்களின் விலை ரூ.4 கோடி. கோடி கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அவர்கள் வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய தொகை சில லட்சங்கள் தான் என்பது வேதனையாக இருக்கிறது.
கேரள அரசு ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரணத்துக்கு கொடுக்கிறார்கள். அவர்களை ஒப்பிடும்போது நடிகர்கள் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளத்தை வெள்ள நிவாரணத்துக்கு கொடுக்க வேண்டாமா?. உங்களுக்கு பெயர், புகழ், பணம் எல்லாவற்றையும் கொடுத்தது ரசிகர்கள் தான். அவர்கள் கொடுத்த பணத்தில் தான் சொகுசாக வாழ்கிறீர்கள். இப்போது அந்த மக்கள் வீதியில் நிற்கும்போது நடிகர்கள் அதிக நிதி கொடுத்து உதவி செய்து அவர்கள் பக்கம் நிற்பது தான் நியாயம்.
இவ்வாறு ஷீலா கூறியுள்ளார்.